துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு குழப்பம்

 

மலையாள நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுரேஷ் கோபியின் தாடியை பார்த்து, அது முககவசமா என அவை தலைவர் வெங்கையா நாயுடு குழப்பத்துடன் கேள்வி எழுப்பிய சம்பவம் நாடாளுமன்றத்தில் நடந்துள்ளது.

பாஜக மாநிலங்களவை உறுப்பினரான சுரேஷ் கோபி தாடியுடன் கூடிய தோற்றத்துடன் அவையில் உரையாற்ற எழும்பினார். அவர் பேசத்தொடங்கியதும் அவரை இடைமறித்த துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, தாங்கள் சாம்பல் நிற முககவசம் அணிந்துள்ளீர்களா என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சுரேஷ் கோபி, இது தாடிதான் என்றும், இது தனது அடுத்த படத்திற்கான புதிய தோற்றம் எனவும் விளக்கமளித்த நிலையில், இந்த நிகழ்வு அவையில் கலகலப்பை ஏற்படுத்தியது.

 

Translate »
error: Content is protected !!