ஜம்மூ காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மூ காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் லஷ்கர் ஈ தொய்பா அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஸ்ரீநகரின் ரெய்னாவாரி பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைக்க தீவிரவாதிகள் தரப்பில் துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்டுள்ளது. இதற்கு பாதுகாப்பு படை தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்க இருதரப்புக்கு இடையே கடுமையான மோதம் மூண்டுள்ளது.

இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில்  ஷ்கர் ஈ தொய்பா அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஒருவன் முன்னாள் பத்திரிக்கையாளர் என்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் லஷ்கர் ஈ தொய்பா அமைப்பில் சேர்ந்த அவர் பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!