பாலியல் இச்சைக்கு உடன்படாத பெண் எரித்து கொலை

நத்தம் அருகே பாலியல் இச்சைக்கு உடன்படாத தம்பியின் மனைவி மற்றும் குழந்தை எரித்து கொலை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வலசு பகுதியில் உள்ள தோட்டத்தில் அஞ்சலை என்பவர் ஆடு மேத்துக் கொண்டிருந்த போது அஞ்சலையின் கணவரின் அண்ணன் கருப்பையா அவரிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்த போது அதற்கு அஞ்சலை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து அஞ்சலையை அரிவாளால் வெட்டி கொலை செய்து அவரின் இரண்டரை வயது குழந்தையை யும் கொலை செய்து எரித்துள்ளார்.

இந்நிலையில் தோட்ட பகுதியிலிருந்து புகை வருவதை பார்த்து அப்பகுதிமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் விசாரணை செய்ததில் கருப்பையா கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கருப்பையாவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!