ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் திருமணம்

 

பாலிவுட் நட்சத்திர ஜோடியான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகியோர் நடப்பு மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். பாலிவுட் பிரபலங்களின் வாரிசுகளான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இருவரும்  ரகசியமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இருவரும் ரகசிய காதலை உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்களது திருமணம் விரைவில் நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்தநிலையில் ரன்பீர்- ஆலியா இருவரும் இந்த மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அவர்களது குடும்பத்தினர் தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் இந்த திருமணம் எளிய முறையில் குடும்ப உறவினர்கள் மற்றும் முக்கிய  நண்பர்கள் சூழ நடக்க விருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!