ஐ.ஐ.டி. மாணவருக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்பா?

 

உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய நபருக்கும் ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தின் கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோயிலுக்குள் நேற்று அத்து மீறிய நுழைய முயன்ற நபரை போலீசார் தடுத்து நிறுத்திய போது ஆத்திரம் அடைந்த நபர், திடீரென தான் கொண்டுவந்திருந்த கத்தியை வெளியில் எடுத்து அங்கிருந்த போலீசாரை நோக்கி தாக்க முற்பட்டுள்ளார். மர்ம நபரின் தாக்குதலில் சிக்கிய இரு போலீசாருக்கும் கழுத்து மற்றும் தலையில் பலத்த வெட்டு விழுந்தது.

இதையடுத்து அந்நபரை கைது செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். இதில் அந்நபர் 2015 ஆம் ஆண்டு மும்பை ஐ.ஐ.டி. மாணவர் என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அந்நபருக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!