தமிழகத்திற்கு 24% நிதியை மத்திய அரசு கூடுதலாக வழங்கல்

 

தமிழகத்திற்கு 24 சதவீத நிதியை மத்திய அரசு கூடுதலாக வழங்கியுள்ளதாக வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். சொத்து வரி உயர்வை கண்டித்தும், திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழக பாஜக சார்பில் சென்னை ராஜாஜி சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் சட்டமன்ற குழு கொறடா நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஆர்.காந்தி, வானதி சீனிவாசன் மற்றும் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, கராத்தே தியாகராஜன் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய வானதி சீனிவாசன், மத்திய அரசுக்கு அளித்துள்ள கடனில் தமிழக அரசு எவ்வளவு திருப்பி அளித்துள்ளது என்ற தகவலை வெளியிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Translate »
error: Content is protected !!