2 1/2 வயது குழந்தை, அதிக ஓவியங்கள் வரைந்து உலக சாதனை

ஒடிசாவைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தை, ‘அதிகபட்ச ஓவியங்களை வரைந்த குழந்தை’ என்ற உலக சாதனையை படைத்துள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தை அன்வி விஷேஷ் அகர்வால். 9 மாத குழந்தையாக இருந்தபோதே வரையத் தொடங்கி, இதுவரை 72 ஓவியங்கள் வரைந்து ‘அதிகபட்ச ஓவியங்களை வரைந்த குழந்தை’ என்ற உலக சாதனை படைத்துள்ளார்.  மேலும் லண்டன் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டிலும் இடம்பெற்றுள்ளார்.

மேலும், அன்வி, 1 வயது 9 மாத குழந்தையாக இருந்த போது, அந்நிய மொழியான ஸ்பானிஷ் மொழியின் 42 ஒலிப்பு ஒலிகளை பேசி இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Translate »
error: Content is protected !!