சென்னையில் போக்குவரத்து நெரிசலோ ஏற்படாத வண்ணம் நடவடிக்கை

சென்னையில் ஏற்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்களால் பொதுமக்களுக்கு பாதிப்போ, போக்குவரத்து நெரிசலோ ஏற்படாத வண்ணம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.

மேலும், 5 லட்சத்துக்கும் மேலான போக்குவரத்து விதிமீறல் அபராத செலான்கள் நிலுவையில் உள்ளது எனவும்,  இன்று துவங்கப்பட்டுள்ள அழைப்பு மையங்கள் மூலம் அபராதத் தொகை செலுத்தாதவர்களை அழைத்து நினைவூட்டுவோம் எனவும்,  அபராதம் செலுத்த அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் எனவும், போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதங்களை பொதுமக்கள் தபால் நிலையம், கிரெடிட் கார்டு உள்ளிட்ட 6 வழிகளில் செலுத்தலாம் எனவும் அவர் கூறினார்.

 

 

Translate »
error: Content is protected !!