டுவிட்டர் நிர்வாக குழுவில் இணைய எலான் மஸ்க் மறுப்பு

உலகின் பெரும் பணக்காரரும் ‘டெஸ்லா’ ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், டுவிட்டரில் குறைபாடுகள் இருப்பதாக கூறி அதற்கு மாற்றாக ஒரு புதிய சமூக வலைத்தளத்தை நிறுவ திட்டமிட்டுள்ளதாக எலான் மஸ்க் கடந்த மாதம் இறுதியில் கூறியிருந்த நிலையில், டுவிட்டர் நிறுவன பங்குகளை அவர் வாங்கினார்.

இதன் காரணமாக, எலான் மஸ்க் டுவிட்டர் நிர்வாக குழுவில் இணைந்து, டுவிட்டரில் சாத்தியமான மாற்றங்களை கொண்டுவர பரிந்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆகையால், எலான் மஸ்க் தங்கள் நிர்வாக குழுவில் இணைவார் என டுவிட்டர் நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால், அவர் டுவிட்டர் நிர்வாக குழுவில் இணைய தனக்கு விருப்பமில்லை என அவர் கூறிவிட்டார்.

மேலும்,  இதுகுறித்து டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “ஏப்ரல் 9-ந் தேதி முதல் அவர் நிர்வாக குழு உறுப்பினராக அதிகாரப்பூர்வமாக செயல்படவிருந்தார். ஆனால், அதே நாள் காலை, நிர்வாக குழுவில் இணைய போவதில்லை என அவர் பகிர்ந்து கொண்டார். இந்த முடிவு நல்லதுக்கு என நான் நம்புகிறேன்” என அவர் கூறியுள்ளார்.

 

 

Translate »
error: Content is protected !!