வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்

 

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

மாரனேசரி கிராமத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மாதன்கோவில்பட்டியை சேர்ந்த 32 வயதான அரவிந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயரமான செய்தியை கேட்டு மிகவும் வேதனையடைந்ததாக தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டதுடன், நிவாரண உதவியாக 3 லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!