உயிரிழந்த துணை ரானுவப்படை வீரரின் உடல் நல்லடக்கம்

காஷ்மீரில் விபத்தில் உயிரிழந்த துணை ரானுவப்படை வீரரின் உடல், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம்  திருத்தணி அருகே அத்திமாஞ்சேரிப்பேட்டை சேர்ந்த துணை ராணுவப்படை வீரர் மணிபாரதி, காஷ்மீரில் நேரிட்ட வாகன விபத்தில் உயிரிழந்தார்.

இதனையெடுத்து அவரது உடல் சொந்த கிராமமான அத்திமாஞ்சேரிப்பேட்டைக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் மு.நாசர் மற்றும் அரசு அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினா். பின்னர், 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் மணிபாரதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

Translate »
error: Content is protected !!