பன்னாட்டு நிறுவனங்கள் குறித்து டுவீட் செய்துள்ள ராகுல்காந்தி

 

இந்தியாவில் இருந்து வெளியேறிய பிரபல பன்னாட்டு நிறுவனங்கள் குறித்து டுவீட் செய்துள்ள ராகுல்காந்தி, ஹேட் இன் இந்தியாவும் (Hate in india) மேக் இன் இந்தியாவும் (Make in india) ஒன்றாக இருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு செவ்ரோலட் கார் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இந்த ஆண்டு டட்சன் நிறுவனம் வெளியேறியது வரை காலக்கோட்டில் ராகுல்காந்தி டுவிட்டர் பதிவு செய்துள்ளார்.

7 உலகளாவிய பிராண்டுகள், 9 பெரும் தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளை இந்தியா இழந்ததை சுட்டிக்காட்டிய அவர், பேரழிவு தரும் வேலையின்மை நெருக்கடியில் கவனம் செலுத்தும் நேரம் இது எனவும் தெரிவித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!