இந்தியாவில் கொரோனா தொற்று நிலவரம்

 

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக நாட்டின் கொரோனா தினசரி பாதிப்பு விகிதம் 0.58 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் தீவிர தொற்று பாதிப்புக்கு 32 பேர் பலியாகியுள்ளனர். மேலும் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 252 பேர் தொற்று பாதிப்பு நீங்கி வீடு திரும்பியுள்ளதாகவும் 16 ஆயிரத்து 279 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 188 கோடியே 19 லட்சத்து 40 ஆயிரத்து 971 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!