புதிய மின் கோட்டங்கள் அமைப்பதற்கு துறை ரீதியாக நடவடிக்கை

 

தமிழகம் முழுவதும் புதிய மின் கோட்டங்கள் அமைப்பதற்கு துறை ரீதியான பணிகள் நடைபெற்று வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, திருவள்ளூரில் உள்ள ஒரத்தநாடு மின்கோட்டத்திற்கு மக்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுவதாகவும் சில நேரங்களில் சீரான மின் விநியோகம் கிடைக்கவில்லை எனவும் எம்எல்ஏ ஜவாஹிருல்லா சுட்டிக்காட்டினார்.

சாலிமங்கலத்தில் புதிய மின்கோட்டம் அமைக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழகத்தில் 3 புதிய மண்டலங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் 3 புள்ளி 24 கோடி மின் இணைப்புகள் இருப்பதாகவும் அதற்கேற்றார்போல் கோட்டங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

 

Translate »
error: Content is protected !!