ரயில் நிலையத்தில் 53 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் சிக்கியது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் பயணிகளின் உடமைகளை சோதனையை மேற்கொண்டபோது 53 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் சிக்கியது.

உடமைகளை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீசார் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இருந்தன் என்பவரது உடமைகளை சோதனை செய்தபோது அதில் ரொக்கப்பணமாக 53 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.

ரயில்வே பாதுகாப்புப்படை போலீசாரால் நடத்தப்பட்ட விசாரணையில், பிடிபட்ட இருந்தன் என்ற நபர் நகைக்கடை கலெக்‌ஷன் பிரிவில் பணியாற்றுவதாகவும், ஆந்திராவில் இருந்து நகை விற்ற கலெக்‌ஷன் பணம் எனவும் போலீசாரிடம் தெரிவித்ததாக தகவல்.

அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் பிடிபட்ட நபரையும், ரொக்கப்பணத்தையும் ஒப்படைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Translate »
error: Content is protected !!