பாதாள சாக்கடைத் திட்டம் கட்டாயம் செயல்படுத்தப்படும் – அமைச்சர் கே.என்.நேரு

 

அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளிலும், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் கட்டாயம் செயல்படுத்தப்படும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில், வினா விடை நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், புதுக்கோட்டை நகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு 131 புள்ளி 90 கோடி ரூபாய் செலவில், 103 கிலோ மீட்டர் தொலைவுக்கு, பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், இதற்கென விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும்,விரைவில் பணிகள் தொடங்கப்படுவதோடு, புதுக்கோட்டை நகரம் முழுவதும் பாதாள சாக்கடைத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.

 

Translate »
error: Content is protected !!