ஷாவர்மா சாப்பிட்ட 17 வயது பள்ளி மாணவி பலி

 

கேரளாவில், ஷவர்மா சாப்பிட்ட 17 வயது பள்ளி மாணவி, பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் செருவத்தூர் நகரில் செயல்பட்டு வரும் ஷவர்மா கடை ஒன்றில், தேவானந்தா என்ற பள்ளி மாணவி அவரது ஷவர்மா நண்பர்களுடன் ஷவர்மா சாப்பிட்டுள்ளார்.

அதனைத்தொடர்ந்து, மாணவிக்கு உடல் உபாதைகள் ஏற்படவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மேலும், 18 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டதாகவும், ஷவர்மா தயாரித்தவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், திரிகரிபூர் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!