ஜெர்மனி பயணத்தை நிறைவு செய்தார் பிரதமர் மோடி

ஜெர்மனியில் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி டென்மார்க் புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடி 3 நாள் அரசு முறை பயணமாக ஐரோப்பா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று ஜெர்மனி சென்றடைந்த அவர்,  அந்நாட்டு பிரதமர் ஓலப் ஸ்கால்சை சந்தித்து பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசித்தார். அப்போது  இந்திய நலன் சார்ந்த 9  ஒப்பந்தங்கள் இறுதியாகின. இந்தநிலையில் ஜெர்மனியில் பயணத்தை நிறைவு செய்த மோடி, டென்மார்க் புறப்பட்டு சென்றுள்ளார். இன்றைய தினம் அவர் அந்நாட்டு பிரதமர் மெட்டே பிரடெரிக்சனை சந்தித்த பின், ராணி மார்க்கிரேட்டுடன் இரவு விருந்தில் கலந்து கொள்கிறார். மேலும் இந்தோ- நார்டிக் மாநாட்டிலும் கலந்து கொள்கிறார்.

Translate »
error: Content is protected !!