தமிழகத்தில் விருப்பத்தின் பேரில் தான் தடுப்பூசி போடுகிறார்கள்

தமிழகத்தில் மக்கள் விருப்பத்துடன் மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  மறைந்த  நகைச்சுவை நடிகர் விவேக் நினைவாக விருகம்பாக்கத்தில் உள்ள பத்மாவதி சாலைக்கு  சின்னக் கலைவானர் விவேக் சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கான பெயர் பலகையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தமிழகத்தில் 2 கோடி பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருப்பதாக குறிப்பிட்டார்.

Translate »
error: Content is protected !!