வஉசி துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

தென் கிழக்கு வங்கக் கடலுக்கும், தெற்கு அந்தமான் கடலுக்கும் அருகே உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக மாறி, பிறகு புயலாக வலுவடையக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி குறித்து மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலும், 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

Translate »
error: Content is protected !!