எஃகு தொழிற்சாலையில் நடைபெற்ற கலவரம் – தொடர்பாக 27 பேர் கைது

 

மகராஷ்டிராவில் எஃகு தொழிற்சாலையில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பால்கர் மாவட்டத்தில் உள்ள பொய்சார் பகுதியில் இயங்கும் எஃகு தொழிற்சாலை ஒன்றில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன.

இதில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் ஆலைக்குள் நுழைந்து ஊழியர்கள் பலரை தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது. இந்தநிலையில் தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார், தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர்.

இதில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதில் 19 காவலர்கள் படுகாயமடைந்தனர். இதனிடையே கலவரத்தை தூண்டியதாக தொழிற்சங்கத்தை சேர்ந்த 27 பேரை கைது செய்துள்ள போலீசார், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!