உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்புக்கு பிறகு 200க்கும் மேற்பட்ட வெடி பொருட்களை கண்டறிந்த பாட்ரான் என்னும் மோப்ப நாய்க்கும், அதன் உரிமையாளருக்கும் அதிபர் ஜெலன்ஸ்கி பதக்கம் வழங்கி கௌரவித்தார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் கிய்வில் நடந்த சந்திப்பின்போது ஜெலென்ஸ்கி இந்த விருதை வழங்கினார்.
அப்போது வாலை ஆட்டி, மோப்ப நாய் குறைத்தது பார்வையாளர்களிடம் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. இந்த விருது மோப்ப நாயின் உரிமையாளரும், சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்தவருமான மைஹைலோ இலீவ் என்பவருக்கும் வழங்கப்பட்டது.