பழனி முருகன் கோவிலுக்கு சரக்கு வாகனத்தை வழங்கிய அமைச்சர்

பழனி முருகன் கோவில் சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட ஒழுங்கு துறை அமைச்சர் காசிவிஸ்வநாதர் சண்முகம் சாமி தரிசனம் செய்தார். பழனி முருகன் கோவிலுக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த உள்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர் காசி விஸ்வநாதர் சண்முகம் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். பழனிக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய சிங்கப்பூர் அமைச்சர் மலை அடிவாரத்திலிருந்து ரோப்கார் மூலமாக மலைமீது அழைத்துச் செல்லப்பட்டார். சாமி தரிசனம் செய்த பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் மலைக்கோயிலுக்கு சரக்கு வாகனம் ஒன்றை சிங்கப்பூர் அமைச்சரும், டிவிஎஸ் கம்பெனி உரிமையாளருமான சுதர்சனம் இணைந்து காணிக்கையாக வழங்கினார்.

Translate »
error: Content is protected !!