சேலம் வந்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையம் வந்தடைந்தார்.

சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணையை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாளை காலை டெல்டா பாசனத்திற்காக  மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார். அதன் பிறகு சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெறும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டத்தில் கலந்து கொள்கிறார் அதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்தடைந்தார் அங்கிருந்து கார் மூலம் காடையாம்பட்டி தாலுக்கா தீவட்டிப்பட்டி சென்ற முதலமைச்சருக்கு சேலம் மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது அதன்பிறகு தொப்பூர் மேச்சேரி வழயாக மேட்டூர் செல்கிறார். இன்று இரவு மேட்டூரில் தங்கும் முதலமைச்சர் நாளை காலை டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார். அதன் பிறகு மேட்டூரிலிரந்து சேலம் வழியாக ஆத்தூருக்கு சென்று அங்கு தமிழக அரசின் ஓராண்டு சாதனை பொது விளக்க கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

Translate »
error: Content is protected !!