போலி பட்டா தயாரித்து மோசடியா? என்ன சொல்கிறது நீதிமன்றம்?

 

முதியவருக்கு சொந்தமான இடத்தின் ஒரு பகுதியை போலி பட்டா தயாரித்து தன்னுடைய மகன் பெயருக்கு மாற்றியதில் சட்ட விரோதம் இருந்தால் விசாரணை நடத்த ராணி பேட்டை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இராணிப்பேட்டை மாவட்டம் ஆட்டுப்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் முதியவர் தட்சிணாமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில் கடந்த 1994ஆம் ஆண்டு தமிழக அரசு கிராம நத்தம் நிலத்தில் 792 சதுர மீட்டர் பரப்பளவில் பட்டா வழங்கியதாகவும், அந்த நிலத்தில் ஓலை வீடு அமைத்து மண்பாண்டம் தொழில் செய்து வருவதாகவும், தன்னுடைய நிலத்தின் அருகே இருக்கும் சுப்ரமணியன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து 900 சதுரடிக்கு நிலம் வாங்கியுள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தாசில்தாருக்கு லஞ்சம் வழங்கி கூட்டு சேர்ந்து, தான் வாங்கிய இடம் மற்றும் தனக்கு சொந்தமான இடத்தின் ஒரு பகுதியை சுப்ரமணியன் என்பவர் போலி பட்டா தயாரித்து தன்னுடைய மகன் பெயருக்கு மாற்றியதாகவும், இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு அளித்த மனு மீது ராணிபேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தாசில்தார் ஆகியோர் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

ஆனால் சம்பந்தப்பட்ட தரப்பினரை விசாரணைக்கு அழைக்கவில்லை என்பதால்,

மாவட்ட ஆட்சியர் பிறபித்த உத்தரவை செயல்படுத்த கோரியும்,  போலி சான்று அளித்து கூட்டு பட்டாவில் சுப்ரமணியனை இணைத்ததை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரினார்.

இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியர் பிறபித்த உத்தரவை செயல்படுத்த உத்தரவிட்ட நீதிபதி, பட்டா தொடர்பாக ஏதேனும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டிருந்தால் ராணிபேட்டை தாசில்தார் மற்றும் சுப்ரமணி மீது 12 வாரங்களில் விசாரணை நடத்த உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

 

Translate »
error: Content is protected !!