கர்நாடகாவில் மீண்டும் ஹிஜாப் சர்ச்சை

 

கர்நாடகாவில் மீண்டும் ஹிஜாப் சர்ச்சை உருவெடுத்துள்ள நிலையில், உடைகள் குறித்து கல்லூரி நிர்வாகம் தரப்பில் மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சர்ச்சைக்குரிய சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

அங்கு பள்ளி மற்றும் பியு மணவர்கள் பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மங்களூருவில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதாக இந்து மாணவர்கள் நேற்று கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது மீண்டும் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில் உடைகள் குறித்து கல்லூரி நிர்வாகம் தரப்பில் மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதில் கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Translate »
error: Content is protected !!