மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் வென்ற நிகத் ஜரீனுக்கு 2 கோடி பரிசு

 

உலக அளவிலான மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற நிகத் ஜரீனுக்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வழங்கினார்.

துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் தாய்லாந்து வீராங்கணையை 5க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கணை நிகத் ஜரீன் அதிரடியாக தங்கம் வென்றார். இதன்மூலம் இந்தியாவுக்கு வெளியே குத்துச்சண்டை வீராங்கணை மேரி கோமுக்கு அடுத்தாக உலகப் போட்டியில் தங்கம் வென்றவர் என்ற பெருமையை நிகத் பெற்றார். இந்நிலையில் தெலங்கானா மாநிலம் தோன்றிய நாளான இன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற விழாவில், 2 கோடி ரூபாய்க்கான காசோலை அவருக்கு வழங்கப்பட்டது.

 

Translate »
error: Content is protected !!