காவல் துறையில் அரசியல் தலையீடு  – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

 

“சென்னை காவல் ஆணையர் ரொம்ப நல்லவர். ஆனால் அரசியல் தலையீடு இருப்பதால் என்ன செய்வது என்பது தெரியாமல் இருக்கிறார்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று  மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட்டார்.  இதையடுத்து அவர்  செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், “ஜனநாயக கடமையை ஆற்றிய என் மீது பொய் வழக்குகள் போட்டுள்ளது திமுக. நீதிமன்ற உத்தரவை மதித்து தொடர்ந்து கையெழுத்திட்டு வருகிறேன். ஊடகங்களையும், கட்சித் தொண்டர்களையும் சந்திக்க ஒரு வாய்ப்பை வாரம் ஒரு முறை ஏற்படுத்தி உள்ளது இந்த அரசு. அந்தமானில் கையெழுத்து போடச் சொன்னாலும் நான் ரெடியாக இருக்கிறேன். அதனை பற்றி கவலை, வருத்தப்படுவதில்லை. எதனை பற்றி கவலைபடுவதில்லை.

இந்து அறநிலையத்துறையை கலைத்துவிட வேண்டும், ஆன்மீகத்தை திருடிக் கொண்டு திராவிடம் என சொல்கிறார்கள். திருக்கோவில் சொத்துக்கள் தொலைந்து போகிறது என்று மதுரை ஆதீனம் கருத்தை உதாசீனப்படுத்த முடியாது. இந்து சமய அறநிலையத்துறை புனிதமானது. இந்து சமய அறநிலையத்துறையில் ஆக்கப்பூர்வமான செயல் எதுவும் செய்யவில்லை. பில்டப் மட்டுமே இருக்கிறது. மதுரை ஆதீனத்தின் கருத்தை உதாசீனப்படுத்தி விட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அனைவரும் மனம் குளிரும்படி செய்வோம் என்று சொல்வார் பாருங்கள்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பராசக்தி பட வசனத்தை போல “கோவில் கொடியவர்களின் கூடாரமாக மாறி விடக்கூடாது என்று இருக்கும். அது போல தற்போது மாறி விட்டது. கருணாநிதியின் வசத்தை உண்மையாக்கும் முயற்சியில் தற்போதைய அரசு அதனை செய்து கொண்டிருக்கிறது.

நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் வருவது போல “திரும்ப திரும்ப பேசுற நீ” என சசிகலா அதிமுக தன்னுடையது என கூறி வருகிறார். அனைத்து நீதிமன்றங்களும் அதிமுக யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக தெளிவாக தீர்ப்பு கூறியுள்ளது. நாங்கள் தான் அதிமுக என்று கூறியுள்ளது. நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலில் சசிகலா ஈடுபட்டு வருகிறார். அவரின் கருத்தை யாரும்  பொருட்படுத்துவதில்லை. அமமுகவில் உள்ளவர் அனைவரும் அதிமுகவிற்கு வந்து விட்டனர். 4 பேர் மட்டுமே உள்ளனர்.பணத்தை வைத்து அரசியல் செய்து வருகிறார். சசிகலா தீய சக்தி. எந்த காலத்தில் சசிகலாவை கட்சியில் சேர்க்க மாட்டோம் என்பதே நிலைபாடு.

பாஜகவில் சசிகலா வரலாம் என நயினார் நாகேந்திரன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்று அண்ணாமலையே கூறிவிட்டார். அது பற்றி நான் எதுவும் சொல்லமுடியாது. சசிகலாவை பாஜகவில் சேர்த்தால் தானே படுகுழியில் விழ வேண்டிய நிலைக்கு பாஜக செல்ல வேண்டாம் என்பது எனது வேண்டுகோள். அதிமுகபொதுக்குழுவில் என்ன தீர்மானம் குறித்து தற்போது பேச முடியாது.

பாஜக தலைவர் அண்ணாமலை அரசின் திட்ட முறைகேடுகள் குறித்து வெளியிட்டுள்ளார். தற்போது டெண்டர் முறைகேடுகள் நடந்து வருகிறது. கட்டிங், கரப்சன், கட்டப்பஞ்சாயத்து நடந்து வருகிறது தமிழ்நாட்டில். அண்ணாமலை முறைகேடுகள் குறித்து பேசி உள்ளார். அதற்கு ஏன் ஆவேசப்பட வேண்டும் அமைச்சர் மா.சுப்ரமணியன். அண்ணாமலை தவறாக பேசி இருந்தால் வழக்கு போடுங்கள். வழக்கு போட தைரியமில்லை. தவறு செய்தவர்கள் திமுகவினர்.

அதிமுக ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டது. தற்போது அது போல இல்லை. நம்ம சென்னை கமிஷனர் ரொம்ப நல்லவர் தான். ஆனால் தற்போது மாட்டிக்கிட்டு முழிக்கிறார். அரசியல் அழுத்தம் காரணமாகத்தான் என் மீது வழக்கு போட்டார்கள். ஒரு மாதத்திற்கு 10 கொலை தான் கமிஷனரே சொல்லலாமா? 10 கொலை போலீசை பொறுத்தவரை சாதாரணமாகி விட்டது. தமிழ்நாடு போதை மாநிலம். தள்ளாடிக் கொண்டிருக்கிறது. ஈரோடு சிறுமிக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் நிகழக்கூடாது. மருத்துவதுறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சொகுசு கப்பல் சென்னை வந்துள்ளது. சொகுசாக வாழக்கூடிய இந்த கப்பலில் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் தான் போக முடியும். நாங்கள் போக முடியாது. ஆன்லைன் ரம்மி அதிமுக ஆட்சி காலத்தில்  ஒழிக்கப்பட்டது. திமுக ஆட்சியில் ஊக்குவிக்க வகையில் செயல்படுகிறது.

திமுக அரசு டெண்டர்களில் வெளிப்படத்தன்மை இல்லாமல் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகிறது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!