தமிழ்நாடு தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

 

மேற்கு தாம்பரத்தில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்கம் சார்பில் விருப்ப மாறுதல் பெற்றும் மறு ஒதுக்கீடு செய்யாமல் காலதாமதம் செய்து வரும்  மின்வாரிய செயர்பொறியாளர் சாந்தியை கண்டித்து தாம்பரம் மின்சார அலுவலகம் அருகே ஊழியர்கள்  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மேற்கு தாம்பரம் மின்சார வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் வணிக ஆய்வாளர் சுரேஷ் பாபு வாரிய விதிகளுக்கு உட்பட்டு விருப்பம் மாறுதல் மூலம்  உத்தரவு வழங்கபட்டு தாம்பரம் கோட்டத்திற்க்கு ஒதுக்கீடு செய்யபட்டு 45 நாட்கள் மேலாகியும் மறு ஒதுக்கீடு செய்யபடாமல் வாரிய விதிகளுக்கு புறம்பாக காலதாமதம் செய்து வருவதாக செய்ற்பொறியாளர் சாந்தியின் நடவடிக்கையை  கண்டித்து தமிழ்நாடு தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்கம் சார்பில் மாநில பொதுசெயலாளர் சிந்தாமணி தலைமையில்  100 க்கு மேற்பட்டோர் கண்டன கோஷங்கள் எழுப்பி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Translate »
error: Content is protected !!