பெண் திருமண வயதை 21 ஆக உயர்த்தினால்  கருக்கலைப்புகள் அதிகமாகும்

 

மத்திய அரசு காவி மயமாக்கும் மருத்துவ கொள்கையை கைவிட வேண்டும் தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்றத்தின் மாநில பொது செயலாளர் த.அறம் கோரிக்கை வைத்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் மன்றத்தில் சமூக  சமத்துவத்திற்கான  டாக்டர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ரவீந்திரநாத் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்றத்தின் மாநில பொது செயலாளர் த. அறம் ஆகியோர் கூட்டாக  செய்தியாளர்களை சந்தித்தனர்.

அதனைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்றத்தின் மாநில பொது செயலாளர் த.அறம்,

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில மாநாடு சாத்தூரில் மே 21,22,23 தேதிகளில் நடைபெற்றதாகவும் அந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார். தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும் திரும்பப்பெற வேண்டும் என்றும், மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை இந்தி சமஸ்கிருத தினிப்பை செய்வதாகவும், இந்துத்துவ பண்பாட்டை உள்ளே தினிப்பதாகவும், ஜாதியை உள்ளே நிலை நிறுத்துகிற வகையில் குலத்தொழிலை வலியுறுத்துவதாகவும் கல்வியை முழுமையாக வணிக மயமாகி கார்ப்பரேட் மயமாகும் இந்த காரணங்களால் இதை திரும்ப பெற வேண்டும் என்றும், கல்வி என்பது பொது பட்டியலில்  உள்ளதாகவும் அதை முழுமையாக மத்திய அரசின் பட்டியலுக்கு மாற்றி மாநில உரிமையை பறிக்கும் வகையில் இந்த கல்விக் கொள்கை உள்ளதாகவும் இந்த தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த கூடாது என்றும் திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

அதேபோல் மருத்துவக் கல்வியில் காவி மயமாக்குவதை, இந்துத்துவ திணிப்பை மத்திய அரசு செய்து வருவதாகவும் நவீன அறிவியல் மருத்துவத்தை மத்திய அரசு ஒழிக்கும் நோக்கத்தோடு செயல்படுவதாகவும், மூடநம்பிக்கையை திணிக்கிறார்கள் என்றும் ஆயுர்வேத மருத்துவத்தை இந்து மருத்துவமாக  முத்திரை குத்தி அதை இந்திய மருத்துவம் ஆக மாற்றுவதற்கு முயற்சி செய்வதாகவும், ஒருங்கிணைந்த மருத்துவம் என்ற பெயரில் நவீன விஞ்ஞான மருத்துவத்தையும் ஆயுர்வேத மருத்துவத்தையும் இணைத்து நவீன அறிவியல் மருத்துவத்தை பின்னோக்கி செய்கின்ற முயற்சி என்றும் மத்திய அரசு காவி மயமாக்கும் மருத்துவ கொள்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். தமிழகத்தில் 3,500 ஆரம்பப் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர் இது தொடக்க கல்வி பயிலும் மாணவர்களின் பாதிக்கும் என்றும் போதிய அளவு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பெண்களின் திருமண வயதை 21 ஆக மாற்றும் பொழுது பல்வேறு சமூக பொருளாதார சிக்கல்கள் உண்டாகும் என்றும், இது ஜாதிய வாதிகளுக்கும், ஆணாதிக்கவாதி களுக்கும், மதவாதிகளுக்கு ஆதரவாக இருக்கும் என்றும், பெண்களுக்கு ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் என்றும்,  வேலைவாய்ப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு தனியார் மற்றும் அரசுத் துறைகளில் பெண்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த அவர் இதனால் பெண்களின் திருமண வயதை அவர்கள் தாமாகவே தள்ளிப்போட முடியும் என்றும் தெரிவித்தார். பெண்களுக்கான திருமண வயதை 21ஆக அமல்படுத்தினால் மருத்துவ ரீதியாக பல பிரச்சினைகளை பெண்கள் எதிர் கொள்வார்கள் என்றும் சட்டத்திற்குப் புறம்பான கருக்கலைப்புகள் அதிகரிக்கும் என்றும் கூறினார்.

ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என்றும் நேட்டோ அமைப்பை கலைக் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். பூஸ்டர் தடுப்பூசியை மத்திய,மாநில அரசுகள் இலவசமாக வழங்க வழி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

பெண்களின் வயது குறித்துசமூக  சமத்துவத்திற்கான  டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் மருத்துவர் சாந்தி பேசியதாவது,

இந்தியாவில் பெண்களின் திருமான சராசரி வயது அதிகரித்து வருகிறது என்றும் தமிழகத்தில் பெண் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவதாகவும், திருமணப் வயதை 21ஆக உயர்த்துவது பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும் அது திமையை மட்டுமே விளைவிக்கும் என்றும், தற்போது குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவதாகவும் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தினால் பல்வேறு பிரச்சனைகளை பெண்கள் எதிர்கொள்ள நேரிடும் என்றும் இதன் மூலம் கருக்கலைப்புகள் அதிகமாக நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

 

Translate »
error: Content is protected !!