நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 8000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு

இதன் மூலம் நாட்டின் பாதிப்பு விகிதம் 3.24 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதில் நேற்று ஒரே நாளில் தீவிர தொற்று பாதிப்புக்கு 10 பேர் பலியாகியுள்ளனர். நாட்டின் கொரோனா பாதிப்பு சமீபகாலமாக அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் 47 ஆயிரத்து 995 பேர் தொற்று பாதிப்புக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிக்கிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் பாதிப்பு விகிதம் 0.11 சதவீதமாக அதிகரித்துள்ளது. 4 ஆயிரத்து 592 பேர் தொற்று பாதிப்பு நீங்கி வீடு திரும்பியுள்ளனர். இதனிடையே, 195 கோடியே 19 லட்சத்தி 81 ஆயிரத்து 150 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!