ஓ.பி.எஸ் தான் ஒற்றை தலைமையா?

அதிமுகவின் மூத்த தலைவர்கள் ஒற்றைத் தலைமை குறித்து ஆலோசனை செய்து வருகிறோம் என  முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வத்தின் தலைமையில்தான் கட்சி செயல்படும் என தொண்டர்களிடம் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உறுதி தெரிவித்துள்ளர். அதிமுகவின் ஒற்றை தலைமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் , வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், மாவட்ட செயலாளர் அசோக், நத்தம் விஸ்வநாதன், தேனி மாவட்ட செயலாளர் செய்யது கான், நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் கச்சை கணேச ராஜா, விருது நகர் மாவட்ட செயலாளர் ரவி சந்திரன் ஆகியோர் ஓ. பன்னீர் செல்வதினை சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை செய்தனர்.

Translate »
error: Content is protected !!