அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு – இளைஞர்கள் முற்றுகை போராட்டம்

 

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்க்கு அக்னிபாத் என்ற புதிய திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது, பல்வேறு இடங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரக்கூடிய சூழ்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2019ஆம் ஆண்டு உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்ற இளைஞர்கள் கொரனா காரணமாக நடைபெறாமல் இருந்த எழுத்துத் தேர்விற்காக காத்திருக்கும் சூழ்நிலையில் அக்னிபாத் திட்டத்தால் தாங்கள் பணியில் சேர முடியாத சூழ்நிலை உருவாகி இருப்பதாக கூறி இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர் ,சுமார் 200 மேற்பட்ட இளைஞர்கள் போர் நினைவு சின்னம் அருகே கைகளில் தேசியக் கொடியை ஏந்தியவாறு அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கமிட்டனர், பின்னர் அவர்களுடன் காவல்துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட சூழ்நிலையில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

Translate »
error: Content is protected !!