5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 17வயது சிறுவன் கைது

 

சென்னையில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 17வயது சிறுவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து கெல்லிஸ் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளனர்.

சென்னை சூளை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வருபவருக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இதற்கு அடுத்த குடியிருப்பில் துப்புரவு பணியாளராக நேபாள நாட்டைச் சேர்ந்த 17 வயது சிறுவன் பணியாற்றி வந்துள்ளார். காவலாளியின் 5 வயது சிறுமி அடிக்கடி விளையாடுவதற்காக  17 வயது சிறுவன் வேலை செய்யும் அடுக்க்மாடி குடியிருப்புகுச் சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல சிறுமி விளையாடி விட்டு அழுதுக்கொண்டே வீட்டிற்கு திரும்பியுள்ளார். சிறுமியின் தாய் அழுவதற்கான காரணம் குறித்து விசாரித்த போது 17 வயது சிறுவன் அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 17வயது சிறுவனை கைது செய்து கெல்லீஸ் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!