புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டியில் கூறியதாவது,

ஜிப்மர் மருத்துவமனையில் தன்வந்திரி வாழ்த்து பாடுவது மருத்துவ துறையின் வழக்கம், ஆனால் தமிழ் தாய் வாழ்த்து பாடாமல் தொடங்கப்பட்டது தெரியாமல் நடந்த தவறு. தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும் என ஜிப்மர் இயக்குனரை நான் கேட்டுக்கொண்டேன், உடனடியாக தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது.

இனி வரும் காலங்களில் ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்படும் என இயக்குநர் உறுதி அளித்துள்ளார். மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மத்திய அரசின் நிகழ்ச்சிகளில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.

புதுச்சேரியில் நிலம் சம்மந்தமான அதிகாரத்தை துணைநிலை ஆளுநருக்கு வழங்க வேண்டும் என்பது ஒட்டு மொத்த மாநில வளர்ச்சிக்கானது, இதனை அரசியல் ஆக்க வேண்டாம்.

Translate »
error: Content is protected !!