ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க திட்ட அறிக்கை – தமிழக அரசு

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தின் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக அப்பகுதியில் பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.

அதற்காக அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் 65 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இடத்தை ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்காக அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர்.

மேலும், அந்த இடத்தில் அரங்கம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள், வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில், அரங்கம் அமைப்பதற்காக விரிவாக திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முழுவதுமாக நிறைவடைந்த அறிக்கையை நான்கு மாதத்திற்குள் சமர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!