அரசு மருத்துவமனையில் இறந்த நிலையில் 7 மாத ஆண் குழந்தை மீட்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மருத்துவமனையில் உள்ள கழிப்பறையை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது அங்கு சுமார் 7 மாத குறை பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை இறந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் தலைமை மருத்துவர் முத்தரசனிடம் இந்த தகவலை தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தலைமை மருத்துவர் கழிப்பறைக்கு சென்று சோதனை செய்து பார்த்ததில் ஆண் குழந்தை இறந்த நிலையில் இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து மருத்துவமனையில் தங்கி இருக்கும் கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளிடம் விசாரணை செய்ததில் யாருடைய குழந்தை என்பது தெரியவில்லை

இந்நிலையில் பரமக்குடி நகர் காவல் நிலையத்திற்கு இறந்த ஆண் குழந்தையின் சிசு குறித்து தலைமை மருத்துவரின் புகாரின் பேரில் பரமக்குடி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அரசு மருத்துவமனையில் கழிப்பறையில் குழந்தை இறந்து கிடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Translate »
error: Content is protected !!