சட்டப்பேரவை சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம்

 

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருக்கும் ஓபிஎஸ்., அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக பொது குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் வேறு ஒருவருக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் வாய்ப்பு செல்ல வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் சட்டப்பேரவை தலைவருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதில் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை சுட்டிக்காட்டி அதிமுக சட்டமன்ற கட்சியை நிர்வாகிகளை மாற்றக் கூடிய வகையில் மனுக்கள் வந்தால்., பொதுக்குழு சம்பந்தமாக நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் இருப்பதால் அந்த மனுக்களை நிராகரிக்க வேண்டும் என கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.

Translate »
error: Content is protected !!