பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்- தமிழ்நாடு அரசு

1ம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக் கூடிய தொடக்ககல்வி மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்குவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.

அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் 110விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.

15 மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் 292 கிராம பஞ்சாயத்துகளில், பரிசத்தமான முறையில் திட்டம் தொடங்கப்பட உள்ளது. பின்னர் படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளபடும். அதற்காக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் படி, 10 குழந்தைகள் முதல் 600 குழந்தைகளுக்கு தேவையான உணவு தினசரி தயாரிக்கப்பட வேண்டும். இதற்காக கிராம பஞ்சாயத்துகளில் கட்டமைப்புடன் கூடிய சமையல் கூடங்கள், கேஸ் சிலிண்டர்கள், எரிவாயு ஸ்டவ் போன்றவை வழங்கப்பட உள்ளது. சமையல் மேற்கொள்ளும் சுய உதவிக் குழுவிற்கு முறையாக பயிற்சிகள் வழங்க ஏற்பாடுகள் மற்றும் காலை 5:30 மணிக்கு தொடங்கி 7:45 மணிக்குள் சமையல் பணியை முடிக்க வேண்டும். சமைத்த உணவை 8:15 முதல் 8:45 மணிக்குள் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!