பஸ்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். போட்டிக்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகிற 28-ந் தேதி நடக்கிறது.

இந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் திருவண்ணாமலை நகராட்சி மத்திய பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை பஸ்களில் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பஸ்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை ஓட்டினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் முருகேசன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் நான்சி, திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!