கல்லூரி மாணவன் அடித்து கழுத்தை நெரித்து கொலை – போலீசார் விசாரணை

விழுப்புரம் மாவட்டம் டி. எடையார் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் அருண் (21 வயது) இவர் விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் பி.ஏ வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய இருசக்கர வாகனத்தை அதே டி. எடையார் கிராமத்தைச் சார்ந்த சரத் (20 வயது) கீர்த்தி (18 வயது) சத்தியன் (17 வயது) திருடி உள்ளனர். இந்த மூன்று பேரும் இருசக்கர வாகனங்கள் திருடுபவர் மற்றும் கஞ்சா போதை பழக்கம் உள்ள வரும் கஞ்சா விற்பனை செய்பவர் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கல்லூரி மாணவன் அருண் என்பவர் இவர்களிடையே இருசக்கர வாகனம் திருட்டு தொடர்பாக மூன்று பேருடைய வாக்குமூலத்தை வீடியோ மூலம் செல்போனில் பதிவு செய்துள்ளார். மேலும் காவல் நிலையத்தில் எனது இரு சக்கர வாகனம் தரவில்லை என்றால் கொடுத்து விடுவேன் எனவும் சொல்லி உள்ளார்

இதனை அறிந்த சரத், கீர்த்தி, சத்தியன் ஆகிய மூன்று பேரும் நேற்று இரவு அருணை அழைத்துக்கொண்டு உனது இரு சக்கர வாகனம் தருவதாக கூறி, மேலும் அவர்கள் கூட்டாளியை வரவேற்று கழுதை நெருக்கியடித்து கல்லூரி மாணவன் அருணைக் கொலை செய்து, அருகிலுள்ள பனப்பாக்கம் ஏரியில் உள்ள கிணற்றில் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

இதனையடுத்து அந்த மூன்று பேரில் சத்தியன் என்ற ஒருவன் போதையில் கிராமத்தில் வந்து கருணை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளனர் என உளறியுள்ளார். இந்த தகவலின் பேரில் கிராம மக்கள் ஒன்று திரண்டு மூன்று பேரையும் பிடித்து திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதுதொடர்பாக இறந்த கல்லூரி மாணவன் இறந்த உடலை கிணற்றிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் மற்றும் திருவெண்ணைநல்லூர் தீயணைப்பு துறையினர்,மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது தொடர்பாக 3 பேரை திருவெண்ணைநல்லூர் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து கஞ்சா விற்பனையில் இவர்கள் முக்கிய நபர்கள் என தெரிய வரவே இதில் மேலும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும், கல்லூரி மாணவன் உடலை பிரேத பரிசோதனை உடனடியாக பண்ணக்கூடாது, எங்களிடம் காண்பித்துவிட்டு அப்புறம்தான் பிரேதப் பரிசோதனை பண்ண வேண்டும், எனக்கோரி கல்லூரி மாணவியின் உறவினர்கள் திருக்கோவிலூர் திருவெண்ணைநல்லூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!