அதிமுக தலைமைக் கழகத்தில் விலையுயர்ந்த பொருட்கள் திருட்டு

அதிமுக தலைமைக் கழகத்தில் வெள்ளி வேல், செங்கோல்கள் திருடப்பட்டதாக சி.வி.சண்முகம் குற்றச்சாட்டியுள்ளார்.

ஜூலை 11ஆம் தேதி சீல் வைக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலகம் இன்று திறக்கப்பட்டது எனவும், அதிமுக அலுவலகத்தில் 2-வது மாடியில் இருந்த முக்கியமான பரிசுப் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் காணவில்லை எனவும், கடந்த 11ம் தேதி நடந்த கலவரத்தின் போது அலுவலக பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த நினைவுப் பரிசுகள் மாயம் எனவும் கூறினார்.

காணாமல் போன பொருட்கள் அனைத்தும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவுப் பரிசுகளாக கொடுக்கப்பட்டவை எனவும் கூறினார்.

Translate »
error: Content is protected !!