சின்னசேலம் பள்ளியிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் சேகரிப்பு

சின்னசேலம் தனியார் பள்ளி வன்முறையின் போது அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட மேசை, நாற்காலி, ஃபேன் உள்ளிட்ட பொருட்கள் கனியாமூர் அருகே உள்ள கும்பகொட்டா மாரியம்மன் கோவில் வளாகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 17ஆம் தேதி சின்னசேலம் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறையின் போது பள்ளி வளாகத்தில் இருந்து சேதமடையாத மேசைகள், நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களை பலர் எடுத்துச் சென்றனர். இந்தப் பள்ளியில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறையினர் மூலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து கனியாமூர் ஊர் பெரியவர்கள் அதனை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

எடுத்துச் சென்ற பொருட்களை சிலர் ஆங்காங்கு வீசிவிட்டுச் சென்றுள்ளனர். அந்த பொருட்கள் சேகரிக்கப்பட்டு கும்பகொட்டா மாரியம்மன் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதனை முறைப்படி மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்க ஊர் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!