ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. குற்றப்பத்திரிகையை ரத்துசெய்யக்கோரிய ஹேம்நாத் மனு தள்ளுபடி செய்ய நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளதால் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என  நீதிபதி சதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் விசாரணை நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார். ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்ய ஆட்சேபம் தெரிவித்து சித்ரா தந்தை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!