மூடி கிடக்கும் ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தல்

மூடி கிடக்கும் ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ராமகிருஷ்ணன் தலைமையில் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலத்தில் மூடி கிடக்கின்ற ரேஷன் கடைகளை திறந்து அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்களை வழங்க கோரியும், அத்தியாவசியப்பொருட்களுக்கு வரி விதித்த மத்திய அரசு மற்றும் விலைவாசியை கட்டுப்படுத்த இயலாத மாநில அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரியார் சிலையில் இருந்து பேரணியாக தலைமைச் செயலகம் நோக்கி ஊர்வலம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்று வரும் ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Translate »
error: Content is protected !!