பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிட பணிகள்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.230 கோடியில் கட்டப்படவுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் அடிக்கல் நாட்டினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு, 2021-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும்ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் (கிங் இன்ஸ்டிடியூட்) ரூ.250 கோடிமதிப்பீட்டில் 500 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, சுகாதாரத் துறை சார்பில் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டுவதற்காக கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 4.89 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிட பணிகளை தமிழகம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது ஆய்வு செய்து வருகிறார்.

Translate »
error: Content is protected !!