அமைதிப்பேரணி – தி.மு.க.தொண்டர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவுநாளை முன்னிட்டு, ஆகஸ்ட் 7ம் தேதி அமைதிப்பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கட்சி தொண்டர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ஓமந்தூராரர் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலையிலிருந்து, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை பேரணி நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து, அமைதி ஊர்வலம் நடத்திலாம் என தொண்டர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

Translate »
error: Content is protected !!