விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் இரு மடங்காக உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு

நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3000 லிருந்து ரூ.6000 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்கள் அவர்களின் இளமைக் காலத்தில் வெற்றியை குவிக்கின்றனர். விளையாட்டு வீரர்களின் வலிமையும், ஆற்றலும் பொருந்திய காலம் நிறைவு செய்த பிறகு சாதனைகளை அங்கீகரித்து ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ரூ.3000 லிருந்து ரூ.6000 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!