அரசு மருத்துவமனையில் கஞ்சாவை விற்க வந்த நபர் கைது

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கஞ்சாவை விற்க வந்த நபரை மருத்துவமனையின் ஊழியர்கள் மற்றும் டீன் உள்ளிட்டோர் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். ஆந்திராவில் இருந்து ஒன்பது கிலோ கஞ்சாவை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கண்ணம நாயுடு என்பவர் கடத்தி வந்திருக்கிறார்.

மருத்துவமனை என்பதால் காவல்துறையினரின் கெடுபிடி இருக்காது என்பதால் இங்கு வைத்து கஞ்சாவை மற்றொரு நபரிடம் விற்க திட்டமிட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்ததால் அவரை மருத்துவமனை நர்சுகள் மற்றும் ஊழியர்கள் பிடித்து டீனிடம் ஒப்படைத்துள்ளனர்.

அவர் வைத்திருந்த பையைத் திறந்து பார்த்தபோது, அதில் ஒன்பது கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் இருப்பது தெரிய வந்ததால் மருத்துவமனையின் உடைய தேரணிராஜன் அவர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Translate »
error: Content is protected !!