ஓ.பி.எஸ். அணிக்கு தாவ நினைக்கும் நிர்வாகிகள்?

அதிமுக பொதுக் குழு வழக்கு ஏற்படுத்திய பாதிப்பால் அதிமுக தொண்டர்கள் ஓ.பி.எஸ்., அணி பக்கம் தாவி வருகின்றனர். திண்டுக்கள், சேலம் உள்ளிட்ட சில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஓ.பி.எஸ்., அணி பக்கம் வந்துள்ளனர்.

மேலும் பலரும் ஓ.பி.எஸ்., அணி பக்கம் தாவக் கூடும் என எடப்பாடி பழனிசாமிக்கு தகவல் வந்துள்ளதால் அவர் அப்செட் ஆகியுள்ளார். மேலும் தனது ஆதரவாளர்களான முக்கிய நிர்வாகிகளிடம், யாரையும் அணி மாறிச் செல்ல விடக் கூடாது. விரைவில் தீர்ப்பு நமக்கு சாதகமாகத் திரும்பும் என எடப்பாடி கூறி வருகிறாராம்.

Translate »
error: Content is protected !!